வெள்ளி, 10 மார்ச், 2017

தோழர்களே  வணக்கம்,  நமது  நீண்ட  நாளைய  கோரிக்கை  ஆன ஊதிய  மாற்றம்  7.3.2017 அன்று BSNL நிறுவனம் அறிவித்துள்ளது . அதில்  ஈரோடு  மாநகராட்சியை B கிரேடு நகரமாக  தரம் உயர்த்தி உள்ளது.  இந்த B கிரேடு நகரம்  என்பது  மாநகராட்சி  எல்லையில்  இருந்து  15 கிலோ மீட்டர்  தூரம் வரை  பொருள் தும்.  எனவே ஈரோடு  அதனை சுற்றி உள்ள பகுதிகளில்  பணி  புரியும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு  ஊதியம்  6500 லிருந்து  ரூ 11362 ஆக உயரும்.  மற்ற  பகுதிகளில்  பணி  புரியும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு  9100 வழங்கப்படும்.  இந்த ஊதியம்  மாற்றம்  பெருவதற்கு நமது  அகில இந்திய,  மாநில,  மாவட்ட, கிளை  BSNLEU, BSNLCCWF, TNTCWU  சங்கங்கள்  நீண்ட காலமாக  கடுமையாக  போராட்டங்களை நடத்தி  உள்ளம்.  இறுதியாக  பாராளுமன்றம்  நோக்கி 4000  பேர் கலந்து  கொண்ட  பேரணி  நடத்தியதன்  விளைவாக  நாம்  வெற்றி பெற்றுள்ளோம். இந்த  வெற்றியை  கொண்டாடும் விதமாக  கிளைகளில் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்க வேண்டும் என மாவட்ட  சங்கங்களின் சார்பில்  கேட்டுக்  கொள்கிறோம். தோழமையுடன் க.பழனிச்சாமி மாவட்ட செயலாளர் ஈரோடு.

----------------------------------------------------------------------------
தோழர்களே ஈரோடு மாவட்டம்  DE ( RURAL ) கிளையின் சார்பில் ஊதிய உயர்வு வெற்றி கொண்டாட்டம் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடப் பட்டது. SNEA மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் C. பரமசிவம், BSNLEU மாநில அமைப்பு செயலாளர் தோழர்  V. மணியன்,   TNTCWU மாவட்ட செயலாளர் தோழர்  K. பழனிசாமி  ஆகியோர் கலந்து கொண்டனர்.
=======================================================================
வெற்றியை  கொண்டாடும் விதமாக தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்தத் தொழிலாளர்கள் சங்கம் பெருந்துறை கிளையின் சார்பாக கிளைச் செயலாளர். சையத் இத்ரீஸ், கிளைப் பொருளாளர் திருநாவுக்கரசு (விவேக்) மற்றும் ரகுநாத் தலைமையில்  கிளைகளில் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடப்பட்டது. மேலும் அனைத்து ஊழியர்களையும் இணைத்து நாம் பெற்ற வெற்றியை விளக்கி கூறும் பொருட்டு சிறிய அளவிலான கூட்டம் போட்டு தோழர். மணி , BSNLEU,  தலைமையில் விளக்கி கூறப்பட்டது. இக்கூட்டத்தில் ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கத்தை வாழ்த்தி பேசுவதற்காக தோழர்.தங்கவேல், Retd, BSNLEU, தோழர்.செல்வசுதர்சனன் SNEA (I), பெருந்துறை,  தோழர்முருகசாமி SNEA (I),  பெருந்துறை  மற்றும் தோழர் துரைசாமி SNEA (I) மாவட்ட செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

உதிரத்தினை உரங்களாக்கி 
வியர்வையில் தினமும் நனைந்து 
உடல்நலம் மறந்த 
உண்மையான உழைப்பாளி 

உண்ண மறந்திருந்து 
உறவும் பிரிந்திருந்து 
திருப்தியான ஊதியத்திற்காய் 
தினம்தினம் போராட்டம் 

நாட்டின் அபிவிருத்தியை 
சிந்திக்கும் அரசுகளும் 
ஆணிவேர் தொழிலாளரென்று மறந்து 
அவன் முன்னேற்றம் கருதாத 
ஆட்சியாளர் கூட்டங்கள் 

அதிகநேரம் வேலைவாங்கி 
சம்பளத்தையும் தரமறுத்து 
இவன் சிந்திய உதிரத்தில் 
சொகுசாய் வாழும் முதலாழிகள் 

குழந்தையின் கல்வியென்றும் 
குடும்பத்தின் பராமரிப்பென்றும் 
ஒருதவணை உணவுக்காய் 
திண்டாடும் தொழிலாளர் 

எவ்வர்க்கமாகினும் உணர்ந்து 
தொழிலாளர் வர்க்கம் சிறந்திட 
சிந்திக்காத மனிதர்களை 
சீர்செய்யும் தினமாகட்டும் இன்னாள்


கவிதை : ஹாசிம் (www.eegarai.net)







































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக